அகத்திக்
கீரையை யாரும் எளிதில் உண்பதில்லை. ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை
கொஞ்சம் இருப்பதனால் உணவில் சேர்த்துக்கொள்ளப் பயப்படுகின்றார்கள்.
ஆனால் இந்த அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும்.
வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல்
அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம்
தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.
மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.
அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.
இனி ஒவ்வொரு கிழமையும் அகத்திக் கீரை உண்டு வாருங்கள் எளிதில் உங்கள் வருத்தங்கள் குணமடையும்.
No comments:
Post a Comment