நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும்
பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.கத்தரிக்காய் காய்கறியாக
பாவிக்கப்பட்டாலும் சார்ந்ததாகும்.
உண்மையில் இது பழ வகையைச்இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும்
இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம்,
நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும்
அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு,
மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும்
காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே
நல்லது.
முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும்.
குறிப்பாக வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய
காய்களுள் இதுவும் ஒன்றாகும்.
தக்காளிக்கு இணையான இக்காய், தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு,
தாது உப்புகள் முதலியன உள்ளன. ஆனால் வைட்டமின் 'ஏ'யும், வைட்டமின் 'சி'யும்
குறைவாகவே உள்ளன.இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் 'பி' தக்க அளவில்
உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக
மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் 'பி' பயன்படுகிறது.
பசியின்மையை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது.
மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும்
தடுக்கப்படுகிறது.முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம்
இவற்றில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது. ஆனால் அளவாகத்தான்
பயன்படுத்தவேண்டும்.இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு
சூடு தரும் காய்கறி இது. எனவே மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல்
கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.
கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும்.
உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள்
கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால்
அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.
மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற
வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம்
சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது
பயன்படும்.வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள
பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.
|
No comments:
Post a Comment